பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சுந்தர சண்முகனார் கள் ஒருவரோடு ஒருவர் பேசி ஆரவாரம் செய்துகொண் டிருந்தனர். இளைஞர்களாயிற்றே - வாளா இருக்க முடியுமா? தேர்வுக் குழுவில் (Executing Committee) யார் யார் இருப்பார்களோ? என்னென்ன கேள்விகள் கேட்பார் களோ? என்று சிலர் பேசிக் கொண்டனர். இதைப் பற்றிக் கேட்கலாம் - அதைப் பற்றிக் கேட்கலாம்' என்று ஒரு சிலர் அறிவித்துக் கொண்டனர். இறுதியில் இவர் தேர்ந் தெடுக்கப்படலாம் - அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று வேறு சிலர் இப்போதே முடிவு எடுக்கத் தொடங்கினர். . இப்படியாக அந்தக் கூடம் கலகலப்பாயிருந்தது. ஆனால், அன்றில் மட்டும் தலையை நட்டவள் நட்டவளே, ஏனெனில், அவள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக - பக்கத்தில் இருப்பவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதும் தன்னைப் பார்த்தபடியே அவர்கள் பேசிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது - ஆனால் அறவணனைத் தவிர! அதனால் அவள் தலையை நட்டுக் கொண்டாள். இஃது உலக இயற்கைதான்! அங்குக் கூடியிருந்தவர்கள், வெளித் தோற்றத்தில் ஒருவரை யொருவர் நலமா - என்று கேட்டு நலம் பரிமாறிக் கொண்டும் சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தார்களே தவிர, உள்ளுக்குள்ளே ஒவ்வொருவரும் ஒரு வல்லரசாகக் குமுறிக் குழம்பிப் புகைந்து பொங்கிக் கொண்டிருந்தார்கள். வேலைக்குத் தேவையானவரோ ஒருவர் - இத்துணை பேர் வந்தால் பின்னே நிலைமை எப்படியிருக்கும்? இவன் வராதிருந்தால் நமக்குக் கிடைத்து விடுமே - அவன் வரா திருந்தால் நாம் தட்டிக் கொள்ளலாமே! நம்முடைய படிப்பு இவனுக்கு இருக்கிறதா? - நம்முடைய தகுதி திறமை அனுபவம் அவனுக்கு உண்டா? இவன்தான் இன்ன ஊர்க் கல்லூரியில் இருக்கிறானே, இவனுக்கு என்ன கேடு - அவன் தான் அந்தக் கல்லூரியில் இருக்கிறானே, அவனுக்கு என்ன