பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 57 கிடைப்பதரிது’ என்று மீண்டும் அவர்மேல் விருப்பங் கொள்ளும். ஆம்! கிளைக்குக் கிளை தாவும் குரங்கை உள்ளத்துக்கு ஒப்புமைப் படுத்திச் சொல்லிப் போனவர்கள் எவ்வளவோ அனுபவசாலிகள்தாம். அன்றிலின் ஓயாத உள்ளப் போராட்டத்திற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. அவள் பள்ளியிறுதித் தேர்வில் (எஸ். எஸ். எல். சி.) வெற்றி பெற்றவுடனேயே அவள் தகப்பனார் மாசிலாமணி அவளது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். மேலும் படிக்க வேண்டும் என்று ஆர்வங்கொண்டிருந்த அன்றிலுக்கு அப்போது திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், பெற்றோர் செய்யும் ஏற்பாட்டை மறுக்கும் துணிவு இல்லை. தாங்களாகப் பெண் கேட்க வந்த சில ಉTು967667 விட்டார்களை மாசிலாமணிக்குப் பி டி க்க வில் ைல. பெண்ணின் தகுதி தரத்திற்கு ஏற்ற பிள்ளை கிடைத்தால் தானே அவர் ஒத்துக்கொள்ள முடியும்? அழகுக்கு ஆசைப் பட்டு வந்து பெண் கேட்கும் ஐயனார் கோயில் உருப்படி களுக்கு எப்படிப் பெண் கொடுக்க முடியும்? அதாவது, கையொடிந்து கால் பிளந்து முக்குடைந்து மூளை சிதறிய ஐயனார் கோயில் குதிரை வீரருக்கு, அறிவும் அழகும் ஒருங்கே நிறைந்த ஒர் உயிரோவியத்தை மனம் வந்து எவ்வாறு மனைவியாக்க முடியும்? மாப்பிள்ளை, பணக்காரன் வீட்டுப் பிள்ளையாய் இருந்தால் போதுமா? அவனுக்கு வேறு தகுதி திறமைகள் வேண்டாவா? குடும்ப உரிமையின்படி அவனுக்குக் கிடைக்கவிருக்கும் சொத்து அவனுடைய தந்தையோ பாட்டனோ சம்பாதித்ததல்லவா? இப்போது தந்தைக்கா பெண் பார்க்கிறார்கள்? இல்லையே! அல்லது பாட்டனுக்கா பெண் பார்க்கிறார்கள்? இல்லவே யில்லையே! இந்தப் பையனுக்கல்லவா பெண் பார்க்கிறார்கள்? எனவே,