பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 77 போது, கடிதம் எதுவும் எழுதாதீர்; இனி என்னோடு எந்த வகையிலும் தொடர்பு கொள்ளாதீர்' என அவள் கண்டிப் பாய்த் தீர்த்தறுத்துச் சொல்லிவிட்டதால், இனி அவள் நமக்குக் கிடைக்கவே மாட்டாள். எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விடுவதேன் என்றும் அறவணன் உள்ளம் மாறி மாறி எண்ணும். பின்னர் ஒருவர்க்கொருவர் உதவிக் கொள்ளுதல் என்ற அடிப்படையிலேயே அவள் நமக்கு உணவு கொடுத்திருக் கிறாள். இதை நாம் தவறாக எடைபோட்டு அவள் நம்மேல் இமயமலை யத்தனை காதல் கொண்டிருக்கிறாள் என்று எண்ணி ஏமாந்துவிடக் கூடாது. ஆடவர்க்கு இப்படியொரு கெடுமதி இருக்கவே கூடாது. எனவே, நாம் அவளை முற்றிலும் மறந்துவிட வேண்டும் - என்ற உறுதியான உணர்வு அறவணனை ஆட்கொண்டு விட்டது. அதன்படி அன்றிலை மறக்க முயன்றுகொண்டே அறவணன் மறுநாள் தம் ஊர் போய்ச் சேர்ந்தார்.