இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தெய்வ அரசு கண்ட இளவரசன்
34
சாக்கிய குலம் விளங்கவந்த தனி வீரன் என்று மாவீரர்கள் கூடிச் சித்தார்த்தனைப் பாராட்டினார்கள்.
"எல்லா வகையாலும் நாடாளத் தகுதி பெற்ற ஓர் ஒப்பற்ற வீரனை மகனாகப் பெற்றேன்” என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தார் மாமன்னர் சுத்தோதனர்.
விருந்து மண்டபத்திலே அவரைக் கேள்வி கேட்ட தம்பி, “அண்ணா , சித்தார்த்தன் நம் குலத்தின் திருவிளக்காக விளங்குவான்!” என்று பொங்கும் இன்பத்துடன் கூறிய சொற்கள் சுத்தோதனரின் செவிகளிலே தேன் பாய்ச்சின.