பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

அப்பொழுது கோடைகாலம். தனக்காகக் கட்டப்பட்ட மூன்று அரண்மனைகளில் ஒன்றான வசந்த மாளிகையில் சித்தார்த்தன் இருந்தான். மூன்று மாளிகைகளிலும் மிக அழகானது வசந்த மாளிகைதான். வசந்த மாளிகையின் ஒரு மண்டபத்திலே சித்தார்த்தன் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். யசோதரை பின்கட்டு ஒன்றிலே தன் தோழிமார்களோடு பேசிக் கொண்டிருந்தாள். ஆகையால் சித்தார்த்தன் தன்னந்தனியே பித்துப் பிடித்தவன் போல் இருக்கவேண்டி நேர்ந்தது.

அப்போது சித்தார்த்தனின் நண்பன் நந்தன் அங்கே வந்து சேர்ந்தான்.

“நந்தா, வா வா. நல்ல வேளையாக நீ வந்து சேர்ந்தாய்!" என்று கூறி அவனை வரவேற்றான் சித்தார்த்தன்.