இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தெய்வ அரசு கண்ட இளவரசன்
36
“சித்தார்த்தா, ஏன் என்னை நீ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாய்?" என்று ஆவலோடு கேட்டான் நந்தன்.
“இல்லை. எனக்குப் பொழுது போகவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். இந்தச் சமயம் நீ வந்துவிட்டாய்" என்றான் சித்தார்த்தன்.
"நல்லது, இப்போது என்ன செய்யவேண்டும்?”
“பொழுது போவதற்கு ஏதாவது ஒரு வழி சொல்.”
“பூஞ்சோலைக்குப் போவோமா?" என்று கேட்டான் நண்பன் நந்தன்.
“போய்ப்போய் அலுத்துவிட்டது. வேறு ஏதாவது சொல்"
நந்தன் சிந்தனை செய்தான்.
திடீரென்று அவன் முகம் பளிச்சிட்டது.
“சித்தார்த்தா, நீ இதுவரை வேட்டைக்குப் போனதே யில்லையே! இன்று வேட்டைக் காட்டுக்குப் போகலாம். பொழுது மிக எளிதாகப் போய்விடும்!" என்றான் நந்தன்.