பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

50

இருந்தது பற்றியும் அறிந்த போது சுத்தோதனர் மிகவும் துன்பப்பட்டார். மேலும் ஒரு முறை சித்தார்த்தன் இத்தகைய வேதனைக் காட்சியைக் காணாமல் இருக்க அவர் தீவிரமான ஏற்பாடுகளை மேற் கொண்டார்.

நான்காவதாக ஒரு துன்பக் காட்சியைக் கண்டால், தான் நெடுநாளாக எதிர்பார்த்துப் பயந்து கொண்டிருந்ததுபோல் அவன் துறவியாகிவிடக்கூடும் என்ற பயம் அவரைப் பிடித்துக் கொண்டது.

கோட்டை வாயில்களிலே அவர் அதிகமான காவல் வீரர்களை நியமித்தார். அத்தோடு மனநிறைவு கொள்ளாமல், தன் தம்பிமார் மூவரையும் மூன்று வாயில்களிலும் நிறுத்தி வைத்துத் தானே நான்காவது வாயிலில் காவல் நின்றார். இரவு நேரத்திலும் வீதிகள்தோறும் காவல் படைகளை உலவிவரச் செய்தார்.

இத்தனை ஏற்பாடுகளையும் கடந்து சித்தார்த்தன் கோட்டையிலிருந்து வெளியேறி விட்டான். சித்தார்த்தனின் தேர்ப்பாகன் சாணன் நல்ல அனுபவமும் திறமையும் உடையவன் என்பதுமட்டு மல்லாமல், சித்தார்த்தனிடம் ஒருவிதமான ஈடுபாடும் கொண்டிருந்தான்.