பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

உண்டாக்கின. வானிலே பாடிப் பறக்கும் சிறுபறவைகளின் குரலொலியும் இறக்கைகள் அடித்துக் கொள்ளும் படபடப்பொலியும் கேட்டு ஆனந்தமுற்றான். என்றும் மலர்ந்திருக்கும் இன்ப வாழ்வை மனித குலம் எய்த வழி கண்டு பிடிப்பதற்குத் தான் ஓர் ஒப்பற்ற வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக அவன் உள்ளுணர்வு கூறியது.

உடனடியாகத் தான் துறவியாகிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

அரண்மனைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணமே சித்தார்த்தனுக்கு அப்போது எழவில்லை. மாலைப்பொழுது வந்தபோது, பூஞ்சோலையின் நடுவில் இருந்த ஏரியிலே இறங்கிக் குளித்தான். குளித்தபின் ஒரு கல்மேடையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். இளவரசன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அரண்மனையிலிருந்து வேலையாட்கள் ஆடைகளை எடுத்துவந்தனர். இளவரசன் வழக்கமாக அணிந்து கொள்ளும் ஆடம்பரம் மிகுந்த அந்த ஆடைகளை சித்தார்த்தன் அணிந்து கொண்டான். 'இதுதான் நான் கடைசி முறையாக இத்தகைய ஆடைகளை அணிந்து கொள்வது'

4