பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெய்வ அரசு கண்ட இளவரசன்

6

விருந்து முடிந்து கூடத்தில் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். எதிர்பாராது ஒன்று கடடிய தன் உறவினர்களுடன் அளவளாவிக் கொண்டு அமர்ந்திருந்தார் மாமன்னர்.

விருந்தினர்களிலே மாமன்னரின் தம்பிமார்கள் இருந்தார்கள், மைத்துனன்மார்கள் இருந்தார்கள். தூரத்து உறவினர்கள் இருந்தார்கள். மாமன்னரின் படையிலும், அரண்மனை அலுவலிலும் அமர்ந்து பணியாற்றியவர்களும் இருந்தார்கள். எல்லோரும் வீரசாக்கிய குலத்திற் பிறந்த மறவர்கள். தோள்வலியிலும் வாள் வலியிலும் சிறந்த மாவீரர்கள். சாக்கிய குலத்தினரின் வெற்றிக்கொடி இறங்காது காத்து வரும் ஆண் சிங்கங்கள். கபிலவாஸ்துப் பேரரசைக் கட்டிக் காத்து நின்ற காளைகள்.

தன் உறவினர்கள் எல்லோரும் எதிர் பாராது ஒன்றுகட்டிய அந்த நிகழ்ச்சியை எண்ணி யெண்ணி இறும்பூதடைந்தார் சுத்தோதனர்.

இன்பமாகப் பேசிக்கொண்டிருந்த போது சுத்தோதனரின் கூடப்பிறந்த தம்பியொருவன் எதிர்பாராத விதமாக ஒரு பேச்சைக் கிளப்-