பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 27 டகாரப்பியாசம் ஆடிமழைக்குப் பின் தோட்டத்து ஈர மண்மேல் புழு ஒன்று உடல் சுவடு பதித்து ஊர்ந்து கொண்டிருந்தது.... தெற்கிலிருந்து வடக்கே நகர்ந்து பிறகு மேற்கே திரும்பி வலது கை வாட்டில் மெல்ல நகர்ந்து நின்று விட்டது. الكاتالوگی நெளிந்து வளைந்த மண் சுவட்டின் வடிவம் தமிழின் டகரம்.