பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11


தான். இரண்டாவது கோலையும் சேகரே போட்டு விடுவானோ என்ற அச்சத்துடன் முரளி அவனை நெருங்கிப் பந்தைத் தன் வசமாக்க வெறித்தனமாக முயற்சி , மேற்கொண்டான். முரட்டுத்தனமாகப் பந்தை இழுக்க முயன்றான். முரளியின் முரட்டுத் தாக்குதலிலிருந்து இரு முறை பந்தைக் `கட்' செய்து நகர்த்திச் சென்றான் சேகர். இதே போக்கில் இன்னும் சில விநாடிகள், பந்தை நகர்த்திச் சென்று பந்தை ஓங்கி உதைத்தால் அது கோலுக்குள் சென்று விடும். கூட்டம் பரபரப்போடு அந்தக் காட்சியைக் காணத் துடித்துக் கொண்டிருந்தது. இன்னுமொரு வெற்றி சேகருக்குக் கிடைப்பதை முரளியால் நினைத்தே பார்க்க முடியாவில்லை.

முரளி திடீரென ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் சேகரை நெருங்கினான். தொடர்ந்து பந்தை மட்டுமல்ல. சேகரையே முன்னேற விடாமல் தடுக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபடலானான். பந்தைத் தன் பால் இழுப்பதற்கு மாறாக சேகரின் காலை ஓங்கி உதைத்து, தன் காலை கொக்கிபோல் மாட்டி இழுத்துவிட முயன்றான். தன் காலை சேகர் லாவகமாக உதறி இழுத்துக் கொண்டான். இதைச் சிறிதும் , எதிர்பாராத முரளி நிலை குலைந்து சமநிலை பெற முடியாமல் தடுமாறி, மடக்கிய காலோடு கீழே விழுந்தான். சேகரின் பந்தைக் கவர்ந்து இழுக்க முனைப்போடு ஓடி