பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17


முன்னேற்றத்தின் மாபெரும் முட்டுக்கட்டைகள் என உணரச் செய்ய இதுவே தக்க சமயம் என முடிவு செய்தார்.

“பொதுவாக ஒரு உண்மையை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும், அது போட்டியாகவே இருந்தாலும்கூட முறைப்படி, பொறுமையாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிடைக்கும். அவசரப்பட்டோ முறை பிசகியோ செயல்பட்டால் வெற்றி கிடைக்காதது மட்டுமல்ல தோல்வியுடன் பெரும் இழப்பும் ஏற்பட்டே தீரும்"கிறதை விளக்கக்கூடிய ஒரு உருவகக் கதையைச் சொல்றேன்.”

இவ்வாறு மாமா கூறியவுடன் கால் வேதனையை மறக்கவும் நல்ல செய்திகளைக் கேட்கவும் கிடைத்த வாய்ப்பாக முரளி கருதினான். வாழ்க்கையில் பெரும் பெரும் அனுபவங்களைப் பெற்றுள்ள மாமா கூறும் உருவகக் கதை நிச்சயமாகப் பயனுள்ளதாகவே இருக்கும் என நம்பி சேகரும் தன்காதுகளைத் தீட்டிக்கொண்டு கதை கேட்கத் தயாரானான். பக்கத்தில் இருந்த நாற்காலியை அவர் அருகே இழுத்துப்போட்டு அதன் மீது அமர்ந்தான். அந்த நேரத்தில் நர்சும் அந்த அறையில் இல்லை.

2