பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21



"இந்தக் கதையிலிருந்து நமக்கு என்ன புரிகிறது?” மாமா வினயமாகக் கேட்டார்.

"அடுத்தவன் நல்வாழ்வை, வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு துன்பம் செய்ய நினைத்தால் நினைத்தவனே அழிவான்’கிறது தான் இக்கதையின் நீதி." பளிச்சென பதில் அளித்தான் சேகர்.

தான் மேற்கொண்ட தவறான செயலையே மாமா உருவகக் கதையாகக் கூறிக்கொண்டிருப்பதை முரளி உணராமல் இல்லை. இக்கதையைக் கேட்டபோது தனக்கு இந்தத் தண்டணை போதாது என அவன் உள்மனம் கூறுவதுபோல் தோன்றியது. முரளியின் கண்களில் தேங்கியிருந்த கண்ணிர் இதை உறுதிப்படுத்தியது.

இததயெல்லாம் ஒரக்கண்ணால் மெளனமாகக் கவனித்துக் கொண்டிருந்த மாமாவின் மனம் மகிழ்ச்சியால் பொங்கியது. தன் தவறை உணர்ந்து. மனம் வருந்தி. தனக்குத் தானே கண்ணிர்விட்டு வருந்தும் முரளி இனி திருந்தி விடுவான் என்ற நம்பிக்கை அவருக்கு வலுவாக ஏற்பட்டது.

சேகர் கூறிய பதில் மாமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் விளக்கம் தந்து பேசலானார்.