பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28



வுமே விளையாத பாலை நிலங்களாக உருமாறிக் கிடந்தன. ஆடு மாடுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. பஞ்சம் தாண்டவமாடத் தொடங்கியது. வேலை இல்லாத மக்கள் வேலை தேடி வேறிடங்களுக்குக் குடிபெயர ஆரம்பித்தார்கள். இதனால், செல்வச் செழிப்போடு பசுமையாகத் தோற்றமளித்த இரண்டு கிராமங்களும் மக்களில்லாத வெற்றிடங்களாகச் வெறிச்சோடிக் கிடந்தன.

நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்களாயின. வருடங்கள் பலவாகியும் இரு கிராமங்களிடையேயும் பகை உணர்ச்சியும் வளர்ந்தே வந்தது.

கருந்தலையரும் செந்தலையரும் மூப்பின் எல்லைக்குச் சென்றனர், இரண்டு பேரின் தலையும் முதுமையின் காரணமாக வெண் தலை களாகிவிட்டன. நடை தளர்ந்தவர்களாக கூன் விழுந்த முதுகோடு தடியூன்றி நடக்கும் நிலை ஏற்பட்டது.

ஒருநாள் மாலையில் முதுமையான வெண் தலையர்களாகிவிட்ட கருந்தலையரும் செந்தலையருமாகிய இரு கிராமத் தலைவர்களும் உலாவச் சென்றார்கள். இரு கிராமத்தையும் இணைத்து நிற்கும் சிறிய குன்றின்மீது பக்கத்து ஒருவராக ஏறி நின்றார்கள். ஒருவரை யொருவர் ஏறிட்டுப் பார்த்தனர். தாங்கள்