பக்கம்:தெளிவு பிறந்தது.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை


மாணவர்கள் தம் துள்ளித் திரியும் பருவத்தில் தங்களையும் அறியாமல் சில தீய உணர்வுகட்கும் செயல்களுக்கும் இடந்தந்து விடுகின்றனர். இவற்றை உரிய முறையில் எடுத்துச் சொல்லும்போது தங்கள் தவறை உணர்ந்து திருந்த வழியேற்படுகிறது..

அத்தகைய சூழலுக்கு ஆட்பட்ட முரளி தன் குறையை ஒரு விபத்து நிகழ்ச்சியின் மூலம் தானாக உணர்ந்து தெளிகிறான். அதற்கு உறுதுணையாக அவன் மாமாவும் சேகரும் அமைகின்றனர். அவன் முற்றாகத் திருந்த இரு உருவகக் கதைகள் துணை செய்கின்றன.

இளைய தலைமுறைக்கு மிகுந்த பயன் அளிக்க வல்ல இந்நூலை மாணவ சமுதாயம் பெற்றுப் பயனுற வேண்டு மென விழைகிறேன்.

அன்பன்

மணவைமுஸ்தபா

நூலாசிரியர்