பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளையவன் 9 229 விட திரி : விட : திரி வீட : திரி வீட அம்மா, திரிசடை, அரசியல் விவகாரத்தில் ஈடு பட்டிருந்தேன். நீ ஏன் கவலை கொள்கிறாய்? அமைச்சரைக் கேட்டேன், அப்பா. அவர் உடைகளை நீங்கள் வாங்கிப் போட்டுக்கொண்டு யாரோ ஒரு புலவனாமே-அவனைப் பார்க்கப் போயிருந்தீர் களாமே! ஏன் அப்பா மந்திரியின் உடை உங்கட்கு? அது ஒர் இரகசியமான விஷயம் அம்மா உனக்குத் தெரிவதால் நலம் ஒன்றுமில்லை. என்ன அப்பா இப்படிப் பேசுகிறீர்கள்? அந்த நாளிலிருந்து உங்கட்கு எத்தனையோ அரசியல் விவகாரங்களில் உதவி செய்து வருகிறேன். நான் இல்லையானால் ஜானகியார் உயிருடன் இருந்திருப் பாக்ா? நீங்கள் இன்று இலங்கையின் ஏக சக்கராதிபதியாய் இருப்பீர்களா? என்னையே இன்று அலட்சியம் செய்யத் தொடங்கிவிட்டீர்களே! (அழுகிறாள்) சரி சரி! அழாதே அம்மா! எனக்கு ஆறுதல் சொல்ல இன்று ஒருவர் வேண்டும். இந்நிலையில் நீயே அழுவதானால். என்னப்பா இலங்கைச் சக்கரவர்த்தியாருக்கு அவ்வளவு பெரிய கவலை? வேத நாயகரான இராகவர் உங்கள் நண்பர்; அவரே முடி கவிக்கும் பேறு பெற்ற உங்கட்கும் கவலையா? நம்பவே . முடியவில்லையே! -

சரியம்மா, மேலும் அடுக்கிக்கொண்டே போகாதே.

என் கவலையைப் போக்க வழி இல்லையா? எந்த நேரத்தில் இராகவரிடம் போனேனோ தெரிய, வில்லையே!