பக்கம்:தெவிட்டாத திருக்குறள் 10.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பறிதல் 5 எந்தத் தொடர்பும் இல்லாத காளை யொருவனும் கன்னி யொருத்தியும் கண்ணுறும்போது பொது கோக்கே நோக்கிக் கொள்வர். காதல் தொடர்புடைய காளையும் கன்னியுமோ சிறப்பு நோக்கு நோக்கிக் கொள்வர், ஏன்இதற்கு முன்பு தொடர்பில்லாத காளேயுங் கன்னியுங்கூட, முதன் முதல் தொடர்பு கொள்ளும்போது, உள்ளத்திலே ஆர்வம் இருந்தாலும் அதனே வெளிக்காட்டாது, ஒன்றும் அறியாதார் போலவே-பார்த்தும் பாராதவர் போலவேபட்டுக்கொள்ளாதவர் போலவே பொது நோக்கு நோக்கிக் கொள்வர். இது, மூன்று தாள் திருப்பும் வேலைக்கு அண்ணகுைம். மூன்று தாள் திருப்பிக் காசு பறிக்கும் சூதாட்டக் காரன், மூன்று சீட்டாட்டத் தாள்களை மாற்றி மாற்றிக் காட்டிக் கவிழ்த்துப் போட்டுவிட்டு, இதிலே வைஅதிலே வை-எதிலே வேண்டுமானலும் வைகாசு' என்று கூவிக்கொண்டிருப்பான். அவனைச் சூழ்ந்து பலர் நின்று கொண்டிருப்பர். அவர்களுள், அவனுடைய கையாட்களும் அங்கும் இங்குமாக இறைந்து நிற்பர். அந்தக் கையாட் களும் ஒன்றும் அறியாதவர் போலக் காசு வைப்பர். சூதாட்டக்காரனெடு நேர்மையாக வாதாடுபவர்போல நடிக்கவுஞ் செய்வர். இவர்களும் தாள் திருப்புபவனும் பிறரை ஏய்ப்பதற்காகத் தமக்குள் தொடர்பில்லாதவரைப் போல் நடிக்கின்றனர். ஆனால், முதல் முதலாகக் காதல் கொள்ளும் காள்ேயும் கன்னியுமோ, தமக்குள்ளேயே ஒருவரை யொருவர் ஏய்ப்பதற்காகக் கபடற்றவர்போல் நடிக்கின்றனர். இதல்ைதான் இவர்தம் நடிப்பை, மூன்று தாள் திருப்பும் வேலைக்கு அண்ணன் எனக் கற்பனை செய்தேன் கான். இவர்தம் நடிப்புத்திறனை, "ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்' என்னுங் தொடரி லுள்ள போல’ என்னும் உவமச் சொல்லால் சுட்டிப் போந்தார் திருவள்ளுவனர். காதலர் ஏதிலர் போல நோக்குதல் என்ருல் அது நடிப்புத் தானே! காதலர் எங்கே? ஏதிலர் எங்கே? இருதிறத்தார்க்கு மிடையே, இரு துருவங்களின் தொலைவு உள்ளதே! இன்னென்று;- காதலர் ஏதிலர் போல நோக்குவதில் ஒரு தனிச் சுவையும் உண்டு-நெஞ்சத்திலே ஒரு தனிப் பெருமிதமும் உண்டு-அதனுல்தான், ஏதிலார் போல