பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Z4 Z . டாசடைாா. சைய. . தவராது. அசயணயா

அப்பொழுது அதனுடன் இணைந்துள்ள மூன்று எலும்புகளான சுத்தி, பட்டடை, அங்க வடிவ எலும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்கிறபோது, உட்காதில் உள்ள நத்தை எலும்பின் உள்ளே இருக்கும் திரவத்திலே போய் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. -

இப்படி, திரவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியானது, அலைகளை உண்டாக்குகின்றன. இந்த அலைகளால், ஒலி நரம்புகள் தூண்டப்பட்டு, ஏற்பட்ட ஒலி உணர்ச்சியை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. - - அதன் பின்னர் செவிப் பறைக்கும் பின்புறம் இருக்கும் ஒரு திரவம், இந்த அதிர்ச்சியை உடனே நிறுத்தி விடுவதால் தான், அடுத்து வருகிற ஒலியைக் கேட்க, காது தயாராகி விடுகிறது. - -- - -