44 தேசியத் தலைவர் காமராஜர் 1896-ஆம் ஆண்டு, ஆர்.எம். சயானி என்பவர்தலைமை தாங்கி, கல்கத்தா நகரிலே காங்கிரஸ் பேரவையை நடத்தினார். 1897-ஆம் ஆண்டு, அம்ரோட்டி நகரில், சி. சங்கரன் நாயர் அவர்கள் தலைமையில் பேரவை நடைபெற்றது. இவர் சென்னை மாநிலத்தில் துவங்கப்பட்ட மெட்ராஸ் மகாஜன சபையின் செயற்குழு உறுப்பினராவார். 1898-ஆம் ஆண்டு, ஆனந்தமோகன் போஸ் அவர்கள் தலைமையில், சென்னை மாநகரில் மகாஜன சபை மாநாடு நடந்தது. 1899-ஆம் ஆண்டு, லக்நெள நகரில் நடந்த காங்கிரஸ் இயக்க மாநாட்டிற்கு ரோமேஷ் சந்திரதத் அவர்கள் தலைமை வகித்தார். 1900-ஆம் ஆண்டு லாகூர் மகாசபைக்கு என். ஜி. சந்தவர்கார் அவர்கள் தலைமையேற்றார். 1901-ஆம் ஆண்டு, தின்ஷா எதுஜிவாச்சா அவர்கள் கல்கத்தா மாநாட்டின் தலைமைப் பொறுப்பு ஏற்றார். 1902-ஆம் ஆண்டு, அகமதாபாத் நகரில் நடந்த மகா சபைக்கு சுரேந்திரநாத் பானர்ஜி அவர்கள் தலைமை வகித்தார். 1903-ஆம் ஆண்டு, சென்னை மாநகரில் கூடியது. அதற்கு இலால் மோகன கோஷ் அவர்கள் தலைவராக இருந்தார். 1904ஆம் ஆண்டு, சர் ஹென்றி காட்டன் அவர்கள், பம்பாய் நகரப் பேரவைக்கு தலைமை தாங்கினார். 1905- ஆம் ஆண்டு வாரணாசி எனப்படும் காசிமாநகர் காங்கிரஸ் மகாசபைக்கு கோபால கிருஷ்ணகோகலே அவர்கள் தலைமை ஏற்றார். இவர், மிதவாத காங்கிரஸ் அணியின் தலைவர்; தேசத் தந்தை காந்தியடிகளால் தனது அரசியல் ஆசான் என்று போற்றப்பட்டவர். 1906-ஆம் ஆண்டு, நடைபெற்றக் கல்கத்தா நகர் காங்கிரஸ் மகாசபைக்கு மூன்றாவது முறையாக, தாதாபாய் நெளரோஜி தலைமை தாங்கி நடத்தினார். 1907-ஆம் ஆண்டு, காங்கிரஸ் மகாசபை சூரத் மாநகரில் கூடியது. அதற்கு ராஷ்பிகாரி கோஷ் அவர்கள் தலைமை வகித்தார். இந்த பேரவைக் கூட்டத்தில்தான், பாலகங்காதர திலகர் தீவிரவாத நோக்குடன் காங்கிரஸ் மகாசபையை விட்டு வெளியேறினார். முதன் முதலாகக் காங்கிரசில் ஏற்பட்ட பிளவு இதுதான்.
பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை