பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 岛序” ரா do so Iтт பக் qт 芬f了 ரா ரா 夺荔” பக் ரங் ó严T ரங் 器 தேசியத் தலைவர் காமராஜர் ஒரிசாவிலே மகாநதி சிறப்பான ஆறு அந்த நதிதான் ஒரிசாவிற்கு உயிர். அதன் வடக்கே உள்ள பகுதிதான் ஒட்ரதேசம்: தெற்கே இருக்கும் நிலப்பகுதி கலிங்கம்! அப்போ, அங்கே வாழ்கின்ற மக்கள் பேசும் மொழி... ஒரியா மொழிஜி! இந்தக் கலிங்க தேசத்தின் மண்ணிலே தான் சாம்ராட் அசோகன் போரிட்டு வெற்றி பெற்றானா? ஆமாம்ஜி மாமன்னன் அசோகன் போரிட்ட முதல் போரும் இறுதி போரும் அதுதான்! அப்படின்னா, காந்திஜியின் அகிம்சை என்ற ஞானோதயத்தை அவன் பெற்றதும் இந்தப் போரின் முடிவில்தான் என்கிறீரா? ஆமாம்ஜி! அப்படின்னா, தமிழ்நாட்டு மாமன்னன் முதலாம் குலோத்துங்கன் கலிங்கத்தைப் போரிட்டு வெற்றி பெற்றதும் இதே இடந்தான் என்று சொல்லும்! அப்படியாஜி! எனக்கு அது, தெரியாதே! நீங்கள் தமிழ்நாட்டு வரலாறு வாசித்திருக்க நியாயமில்லையே! அதற்கு ஏதாவது சரித்திர ஆதாரம் இருக்கிறதாஜி! ஜயங்கொண்டார் என்ற எங்கள் நாட்டுக் கவிஞர் பாடிய கலிங்கத்துப் பரணி என்ற காவியம் இருக்கிறதே ரங்கையா! அதன்சிறப்பு என்ன தெரியுமா? அந்தநூலைக்கலிங்கத்துப் பரணி என்பர்; பரணிக்கோர் ஜயங்கொண்டான் என்றும் புகழ்வர். ஓ மை காட், அப்படிப்பட்ட காவியமா அது? ஆமாம் ரங்கையா! அது சரி அஜந்தா எல்லோரா குகைகளும் இங்கேதான் இருக்கின்றனவா? ஆமாம்! சென்னைக்கு அருகே உள்ள மகாபலிபுரம் போல, அஜந்தா - எல்லோரா குகைகளும் சிறப்பு வாய்ந்த குகைக் கல் வெட்டுக்கள்ஜி!