பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 67 பக் பக் ரங் பக் ரங் 巴历f了 ரங் ᏜfᎢ ரங் பக் ரங் 岛厅 பக் ரங் பக் அப்படியானால், கலிங்கர்கள் வரலாற்றைக் கூறும் ஹதிகும்பாகல்வெட்டுகளும் இங்கேதான் இருக்கின்றன இல்லையா? ஆமாம்ஜி! அந்த கல்வெட்டுக்கள்தான் ஒரிசா வரலாற்றை விவரமாக விளக்கிக் கொண்டிருக்கிறது! அப்படியா! இங்கே உள்ள காவல்துறையில் ஒர்அதிசயம் நடந்து வருகிறது.ஜீ. அது என்ன ரங்கையா? ஒரிசா மாநிலக் காவல்துறையினர், புறாக்களைத் தூதுவிட்டுச் செய்திகளைச் சேகரிக்கின்றார்கள்! அடடே! நளன் தமயந்தி கதையிலே அன்னத்தைத் தூதுவிடும் கதை இங்கே நிஜமாகவே நடக்குதோ! ஆமாம்ஜி! அந்தப் புறாக்கள் சென்று செய்தி சேகரிக்க நாற்பது வழித் தடங்கள் இருக்கின்றன! அவைகளுக்கு அந்த வழிகளைக் காட்டுவது யார்? எப்படி? வழிகளை யாரும் காட்டுவதில்லை. புறாக்களுக்கு மட்டும்தான் அந்த வழிகள் தெரியும்! அவைகட்கு எப்படிப் பயிற்சி தரப்படுகின்றது ரங்கையா? அந்தப் புறாக்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று ஸ்டேடிக் (Static) இரண்டு பூமராங் (Boomarong), மூன்றாவதாக மொபைல் (Mobile) என்பவையே அவை: இந்த மூன்று வகைகளிலே காவல்துறையினர் பயிற்சி கொடுத்துச் செய்தி சேகரிக்கிறார்களா? அட... டே இது நமக்குப் புரியாது போச்சே என்ன முதலியார்வாள், நாமும் செய்திருக்கலாம் இல்லையா? செய்திருக்கலாம்! இப்பதானே கேள்விப்படுகிறோம்! ஒரியர்கள் மதநம்பிக்கை உள்ளவர்கள்; கலை ஆர்வமுள்ளவர்கள் ஜி! அதெப்படி?