இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25
பார்க்க வில்லை. "என்ன தம்பி சொல்கிறாய்?" என்று சொல்லிக் கையில் இருந்த இட்டிலியை கரி கீழே வைத்தது,வைத்தது தான் தாமதம்; மறு கணத்தில் காக்கை தன் வாயில் பிடித்திருந்த கிண்ணத்திலிருந்த மிளகாய்ப் பொடியை அப்படியே நரியின் கண்மேல் கொட்டி விட்டு அது கண்ணைத் துடைப்பதற்குள் இட்டிலியைக் கவ்விக்கொண்டு பழைய மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது.
நரியோ மிளகாய்ப்பொடி விழுந்ததனால் கண்ணைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டது; எரிச்சல் தாங்க முடியவில்லை. "ஐயோ! ஐயோ! ' என்று கதறியது.
காக்கை, "நரியண்ணா, மிளகாய்ப் பொடி எப்படி இருக்கிறது! இட்டிலியினால் உன்னுடைய நாக்கில் நீர் சுரங்தது. இப்போது மிளகாய்ப் பொடியினால் கண்ணிலே நீர் சுரக்கிறது. நல்ல வேளை! இவ்வளவு நேரத்தில் இட்டிலியை விழுங்காமல் இருந்தாயே! உனக்கு வந்தனம்"என்று சொல்லிவிட்டு இட்டிலியைத் தின்றது.