பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131


கண்கண்ட மனித தெய்வங்களாக இருந்து எங்களை -தம்பதி சமேதரான எங்களை மனப்பூர்வமாய் ஆசீர் வதியுங்கள் ! - நீங்க ரெண்டு பேரும் ஏன் அப்படிப் பார்க்கிறீங்க ? - நான் இஷ்டப்பட்ட கல்யாணமாக்கும் இது - ஆமாங்க ; இது உண்மையான, சத்தியமான, தருமமான கலியாணமாக்கும் !...ம் ஆசீர்வதியுங்க !' மணமகனும் மணமகளும் திருமண மாலைகளை மாற்றிக் கொண்டார்கள், கெட்டிமேளம் முழங்கியது. திருப்பூட்டி முடிந்தது. 'நல்ல விளக்கு', அதீதமான ஒளியைச் சிந்திக் கொழுந்துவிட்டு எரிகிறது ! ஆத்மநாதனும் சிவகாமியும் தங்களுக்குள்ளே அந்த ரங்கத்தைப் பேசி வைத்திருந்தவர்கள் மாதிரி, ஒரே நேரத்திலும் பாவனையிலும் கைகளைத் தூக்கியெடுத்து உயர்த்திப் புதுமணத் தம்பதியை புதிய மனத் தம்பதியைப் பூரிப்புத் துலங்கிட ஆசீர்வாதம் செய்கின்றனர், ! அடுத்த வினாடியில் - இரு ஜோடிக் கரங்களும் ஜோடி பிரியாமலே தொய்ந்தும் சாய்ந்தும் விழுந்துவிட்டன ... ! சோதனை ! ... சோதனைதான் ... 'அம். மா !' என்று கதறினாள் பார்வதி. அ.ப்பா' என்று அலறினாள் அவள் இஷ்ட தெய்வங்களின் காலடியை விட்டெழுந்து, "ஐயையோ பாழாய்ப்போன தெய்வமே' என்று விம்மி வெடித்த வண்ணம் நடந்து, அந்தத் தெய்வ மணிக்கரங்களை எடுத்து கண்களிலே ஒற்றிக் கொண்டு, குமுறிக் குமுறி அழுதாள் ; கதறிக் கதறிப் புலம்பினாள். மண்டையிலே அடித்துக் கொண்டு ஒலமிட்ட ராமையாவை கட்டிப் பிடித்து அணைத்துக்