பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காலத் தேவனுக்கு இப்போது கொள்ளிவாய்ப் பிசாசாக வேடம் கட்டிக் கொள்ள வேண்டுமென்ற வக்கிரப் புத்தி தோன்றியிருக்க வேண்டும். செந்தில் கெட்ட சொப்பனம் ஏதாகிலும் கண்டு விட்டானோ ? வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்! தடுமாற்றமும் தவிப்பும் தோன்றியது போலவே மறைய லாயின. நிதானம் அடைந்தான் ; மணிக்கட்டில் காலத் தேவனை சந்தித்தவன், எதிர்ப்புறத்தில் தெருவாசலில் பார்வையைச் செலுத்தினான். பெருமையாகவும் பெரு மிதத்தோடும் ஓர் அரைக்கணம் அவன் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்; காரியசித்தியின் வெற்றிக்களிப்பு அந்த ச் சிரிப்பிலே கடமை தவறாமல் கொடிகட்டிப் பறந்தது. தண்ணுணர்வு அடைந்ததுதான் தாமதம் ; அவன் கண்கள் மீண்டும் கலங்கத் தொட்ங்கின :ஆமாங்க இது உண்மையான-சத்தியமான-தருமமான கலியாணமாக்கும் ; ஒ மிஸ் பார்வதி சொன்னார்கள் ! காடவிளக்கின் தலைமாட்டில் ஆத்மநாதன் - சிவகாமி தம்பதியர் இன்னமும் கூட தம்பதி சமேத ராகவே கண் அயர்ந்து கொண்டிருக்கிறார்களே ! மேலே சிட்டுக்குருவி. கீழே வெள்ளைப்பூனை' உடலும் உள்ளமும் அதிர்ந்து குலுங்க அண்டினான்; அவள் கால்மாட்டில் குத்துக்காலிட்டுக் குந்தியவாறு, அவளுடைய பொற்பாதங்களை பொற்புமிக்க பாதங் களை நடுங்கும் விரல்களை நடுங்காமலே தொட்டான் : "என் அப்பாவும் அம்மாவும் செத்தவங்க பிழைச்சிருக்கப் படாதா ? - பாவம், பார்வதி !’