பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

"சரி, சரி; எந்திரிச்சு வாயைக் கொப்பளிச்சுட்டு, சூடு ஆறுறத்துக்குள்ளாற காஃபியைக் குடி, அம்மா !”

“ஆகட்டும், பார்வதி".

பார்வதிக்கு வாயெல்லாம் பல்; பல்லெல்லாம் குறும்பு நகை.

அம்மா இனி இயந்திரம் ஆகிவிடுவாள் ! தஞ்சாவூரில் விடிந்ததும் விடியாததுமாகவே கீழேவாசல் கடை வீதி அமர்க்களப்பட ஆரம்பித்து விடுகிற மாதிரி ஆகி விடும் இந்த வீடு !...

பார்வதிக்குச் சிரிக்கவும் தெரியும் !