பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


பார்வதி முகம் சுளித்தாள். மறு ஐந்தாவது நிமிடத்தில். அவர்கள் இரண்டு பேரும் பூமனத்தோடு திரும்பி விட்டார்கள். பார்வதி விநயமாகவே சிரித்துக்கொண்டாள். படைப் பிலக்கியத்தை மட்டுமல்லாமல், இளைய தலைமுறையை யும் பாழ்படுத்திக் கொண்டிருந்த இம்மாதிரியான ஒரு சிலரது திசைகளிலேகூட தலைவைத்துப் படுக்காதவர் முதலாளி என்பதை அவள் மட்டுமே அறிவாள். கனகசபை அழைத்தார். நுழைந்தாள் பார்வதி. 'யாரோ செந்தில்நாதனாம் ; உங்களோட பேசணு மாம் !” "நான் வீட்டுக்குப் போயிட்டதாகச் சொல்லிடுங்க GUT方!”” திரும்பினாள் அவள். மறுபடி கூப்பிட்டார் உரிமையாளர் ; "இப்ப தாரான்னு ஒரு பொண்ணு பேச ஆசைப்படுறாங்களாம்!' என்று தெரிவித்தார். 'நான் தான் முன்னாடியே வீட்டுக்குப் புறப்பட்டாச் சுங்களே, ஐயா !” "ஆமா, ஆமா !” சிரிப்பில் சிலிர்த்தவாறு, பார்வதி மீண்டாள் ; மிச்சம் இருந்த அரை மணி நேரமும் நல்லதனமாகக் கழிந்திட வேண்டுமென்று முப்பாத்தம்மனைப் பிரார்த்தனை செய்தான் ! -