பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


இருந்திருந்தால் எங்க ஒட்டை வீட்டிலேயும் குபேரச் சம்பத்து கொழிச்சிருக்குமே ? பிராப்தம்னு சொல்லப் படுற அதிர்ஷ்டம் கூடி வந்திருந்தால், அப்பா - அம்மா மனம் குளிர்கிற மாதிரி எண்பத்தி மூணிலேயே நான் மாலையும் கழுத்துமாக ஆகியிருக்கமாட்டேனா ? ஒன்று விட்ட அறந்தாங்கி அத்தை வீட்டின் சம்பந்தம் வரதட் சனைத் தகராறில் முறிஞ்சி போயிடாமல், கல்யாணமும் ஜாம் ஜாம்னு நடந்திருக்குமே ?-கமலிக்குக் கடிதம்வரைந் தாள் மாலையிலேயே வீட்டுக்குப் போகும் வழியில் கட்டில் சேர்த்து விடலாம்! - அயர்ச்சியில் கொட்டாவி பறிந்தது. தினம் தினம் எவ்வளவு தூரம் தா ன் நடப்பதாம் ? யூசுப் காப்பி கொடுத்தான். எடுபிடிப் பையன் சாலமன் பதட்டமாக உள்ளே பாய்ந்தான்; தெருவிலே ஒரு விபத்து நடந்திருச்சு; தெருத் திருப்பத்திலே மடங்கின கருங்கல் லாரி ஒண்ணு எதிர்த்து வந்த புது ஸ்கூட்டர் மேலே பேய்த்தனமாய் மோதி ஸ்கூட்டர்லே வந்தவங்க ரெண்டு பேரையும் அலக்காத் தூக்கி யெறிஞ்சிடுச்சு; நல்லகாலம், அவங்க உயிர் தப்பிச் சிட்டாங்க !' என்று விவரம் தெரியப்படுத்தினான். அவன் மறுகணம் ; கனகசபை, கதர் ச்சட்டை தும்பைப்பூவெனப் பளிச்சிட மனிதத் தன்மையின் பரிவோடு விரைந்து வெளியேறினார். பார்வதிக்கும் உள்ளே இருப்பிடம் கொள்ளவில்லை. நடுத்தெரு, பேயைக் கானோம் !