பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


விட்டக்குறை - தொட்டக் குறையாகப் பற்றி தொற்றிக்கொண்டுவிடுவதும் இயல்பாகிவிடும்! சரி : அழைப்பது அம்மாவேதான்! அவள் நிதானமாக எழுந்தாள். அவரவர் இஷ்டத்திலும் போக்கிலும் தன்னை காதலித்ததோடு நிற்காமல், காதல்பாயிரம் வேறு பாட வும், பாடிக்காட்டவும் முன் வந்த அத்தனை காதலர் களின் காதல் கடிதங்களை அத்தனையையும் வழக்கம் போலவே ஒரு குவியலாக எடுத்து உரைக்குள்ளே திணித்து அந்த உறையைப் பற்றற்ற நிலையில் பற்றியவளாகக் கூடத்துக்கு நடந்தாள் ; பெட்டியில் அடைத்தாள். திரும் பினாள் ; ஒரு வாய் தண்ணிர் குடித்தாள் ; மீதித் தண்ணிரில் கண்களையும் கைகளையும் கழுவினாள், அம்மாவிடம் ஓடினாள். அவளோடு புதிய உற்சாகமும் ஒடி வந்தது. காதல் என்கிற உணர்வையும் கைகழுவி விட்டதால் விளைந்த புது அனுபவம் அவளது மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் இந்த இல்லத் தின் மதியானச் சாப்பாட்டுக்கு முட்டைக் குருமாதான் ஸ்பெஷல் ! பார்வதிக்கும் ருசி உண்டு ; பசியும் உண்டு ;- அது சரி : ஞாயிற்றுக்கிழமைகளிலேனும் இந்தப் பசிக்கு விடு முறை விட வேண்டாமோ ? அவளுக்குச் சிரிக்கவும் தெரிந்திருந்தது முட்டை கோசு பொறியலுக்குச் சன்னம் சன்னமாக நறுக்கினாள் தேங்காய் மூடியைத் துருவி முறத்தில் தனியாக வைத்தாள். பாகற்காய்களைத் துண்டு துண்டாக அரிந்து சாம்பாருக்காக ஒதுக்கினாள். அம்மா - அப்பா சாப்பாட்டுக்காகவே காத்திருக் கிறார்கள், !