பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


பலையேன்னு பயந்து, நான்தான் உன்னைத் தேடிக்கினு ஒடியாந்தேன்.' பாசம் தூண்டியது. பாசம் தூண்டிலும் ஆனது. இருளும் ஒளியும் கண் பொத்தி விளையாடிக் கொண்டிருக்கின்றன. அக்காவும் தம்பியும் நடந்தனர். சரோஜினி தெருவின் திருப்பத்தில் ரோஜா நிறத்தில் ஒரு கார் திரும்பியது. ஒ...செந்தில்...மிஸ்டர் செந்தில் ! ':நல்லா இருக்கீங்களா, மிஸ் பார்வதி ?' 'நல்லா இருக்கேனுங்க போயிட்டு வர்றேன்: அம்மா வுக்கு ஐ.டம்புக்கு முடியலையாம் !' "அப்படியா ? நீங்களும் தம்பியும் வண்டியிலே ஏறிக் கங்க; வீட்டிலே கொண்டு வந்து விட்டுட்றேனுங்க : டாக்டர் ராஜ் பெரிய கார் டியாலஜிஸ்ட். அவரையும் அப்புறம் அழைச்சிட்டு வருவேனுங்க !' 'ரொம்ப ரொம்ப நன்றிங்க, உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் ? நாங்க போய்க்கிடுறோமுங்க ' டால்ஃபின் திசை மறுகித் திசை திரும்பிவிட்டது ! 帶