பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


நீ ஏறிக்க உங்கப்பாவுக்குத் தேவையான மருந்துகளை நானே வாங்கித்தந்து, உன்னை உன் வீட்டிலே ட்ராப் செஞ்சிட்றேன் என்று மன்றாடினாள். ஒடும் பாம்பை மிதிக்கின்ற பருவத்தில் நின்ற இளைஞன் ஒருவன் நாலு தப்படி தள்ளி நின்று, எல்லாக் கூத்தையும் நாடகரசனையோடு ரசித்துக் கொண்டிருந் தான். நாகரிக மோகத்துக்குப் பிடி கொடுக்காத எளிமைக் கோலம். - அப்பாவின் நெஞ்சுவலி பிடரியைப் பிடித்துத் தள்ளவே பார்வதி பதை பதைப்போடு நடந்தாள். பார்வதி...என்று பலத்தகுரலில் கூவியபடி ஒரே ஒட்டமாக ஓடி வந்த மாதங்கி பலமான புன்னகையோடு பார்வதியின் நடுங்கிய கைகளைப் பிடித்துக் கொண்டு, "உன்னோட வீம்பு எனக்குப் புதுசா ?' என்று கூறிச் செல்ல கோபம் சிந்தினாள். பார்வதி திமிறினாள். மாதங்கி விட்டுவிடுவாளா ? ...ரத்தச்சிகப்பில் பயமுறுத்திய மாதங்கியின் நவீன பாணிக் காரின் எண்களில் திடீரென்று மின்னல் வெளிச்சம் வெட்டிப் பாய்ந்தது. சங்கத்தமிழ் விளம்பரம் பேசுகிறது அதே நேரத்தில் காவல் துறை வாகனம் ஒன்று சீறிப்பாய்ந்து அங்கே திரும்பிக் கொண்டிருந்தது. மறுவினாடி, பார்வதியின் கைகளை உதறிவிட்டுத் தன்னுடைய காரை நோக்கிப் பாய்ந்தாள் மாதங்கி. அந்த இளைஞன் தவித்தான். பார்வதி ஒதுங்கினாள்.