பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(iv) பூவையின் கடைசி நாட்கள் இவை ! நல்ல நேரத்தில்தான், பார்வதி, தேவலோகப் பாரி ஜாதமாக மனம் பரப்பி, மணம் பரப்பத் தொடங்கி யிருக்கிறாள் பார்வதியின் அன்பு மாண்புமிக்கது - மகத்தானதும் கூடத்தான் !... அன்று. கவிச்சக்கரவர்த்திக்குச் சடையப்ப வள்ளல் கிடைத் தது இலக்கியச் சிறப்பு வாய்ந்ததாகும் ! இன்று. எனக்கும் ஒரு வள்ளலாக, அறிஞர் துரை. இரா.மு விளங்குகிறார். தமிழக அரசின் முதற் பரிசுகளை வென்றவர் பூவை என்பார்கள், தமிழ் இலக்கியத்தின் திறனாய்வாளர்கள். அந்த நற்பெயருக்கு மேலும் மணம் ஊட்டுவாள் தேவலோகப் பாரிஜாதம் பார்வதி ! உங்கள் அருமைப் பூவையை நீங்கள் நாளும் பொழுதும் மகிழ்வுடனும் அன்புடனும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிற்றே, இலக்கிய ஆர்வலர் களாகிய நீங்கள் உங்களையெல்லாம் மறப்பேனா ! நன்றி ! 'தமிழரசி' வை. எஸ். கம்

  1. } பூை ஆறுமு.

寧 發 發