| ஒ. பண் - கொல்லிக்கெளவாணம் திருவகிகைத்திருவீரட்டானம் திருச்சிற்றம்பலம் தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற் கொள் பிறையான விடைமேற்கொள் விகிர்தன், கைம்மா வின் உரியானேக் கரிகாட்டில் ஆடல் உடையான விடையா னேக் கறைகொண்ட கண்டத், தெம்மான்றன் அடிக்கொண் டென் முடிமேல்வைத் திடும்என்னும் ஆசையால் வாழ் கின்ற அறிவிலா நாயேன், எம்மானே எறிகெடில வடவீரட் டானத் துறைவானே இறைபோதும் இகழ்வன்போ லியானே. - . 1 ன்னேனம் பெருமானே மறந்தென்கொல் மறவா தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன், பொன்னோன் மணியேவெண் முத்தேசெம் பவளக் குன்றமே ஈசனென் றுன்னேயே புகழ்வேன், அன்னேஎன் அத்தானன் றமரால் அமரப் படுவான அதிகைமா நகருள்வாழ் பவனே, என்னே என் எறிகெடில வடவீரட் டானத் துறைவான இறைபோதும் இகழ்வன்போ லியானே. 2 விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே விண் ணவர்தம் பெருமானே மண்ணவர்கின் றேத்தும், கரும்பே என் கட்டிஎன் துள்ளத்தால் உள்கிக் காதல்சேர் மாதாாள் கங்கையாள் நங்கை, வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும் வரிஅரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை, இரும்புனல்வங் தெறிகெடில வடவீரட் டானத் துறைவான இறைபோதும் இகழ்வன்போ ஜியானே. 8 1. இறைபோதும் - கணமேனும். 2. அமரப்படுவானே - விரும்பப்படுபவனே.
பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை