196 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) யின் திருப்பணிக்கு உகந்து அதை மறுபிறப்பிற் கோச் செங்களுன் என்னும் அரசகைச் செய்தார் இறைவர். சிலந்தியின் குற்றத்தையும் குணமாகக் கருதினர் இறைவர். களிற்றுப் படை கொண்ட கோச்செங்களுன் கட்டிய கோயில் கன்னிலத்துப் பெருங்கோயில்; இச் சோழன் தென்னவனுய்ப் பாண்டி காட்டையும் ஆண்டனன். 24. கோட்புலி: பகை மன்னவர் கூட்டத்தை வென்ற வீரர் இவர். அதனல் வேல் நம்பி’ எனப்பட்டார். o 25. சடையர் : சுந்தரருடைய தந்கையார். இவர் கல்லவர் யாரிடத்தும் நண்பு பூண்டிருந்தவர்; திருத் தொண்டத் தொகையைச் சுந்தார் பாடினதற்கு முன்னரே சிவபதம் அடைந்தவர். 26. சண்டேசுரர் : மணலால் இலிங்கம் இயற்றி உண்மைப் பத்தியுடன் மலர்ப்பூசனே செய்தவர். அபிஷேகத் துக்கு வைத்திருந்த பாலைக் கோபத்துடன் காலினல் இடறிய தந்தையின் தாளை மழுவினல் துண்டித்தவர் ; இவருக்கு இறைவர் தாம் அணியும் ஆடை, ஆபரணம், மாலை இவை களே அணியும் அமுக பதவியைத்-தேவர்களும் தொழும் படியான பெரும் பதவியைத்-தந்தனர். இவர் 'தண்டி’ எனவும் கூறப்பட்டுள்ளார். தம்மாட்டுத் தஞ்சம் கொண்ட இவரைத் தமக்குச் சமமான நிலையில் வைத்து மகிழ்ந்தார் இறைவர். 27. சத்தி நாயனுர் : இவர் ஊர் வரிஞ்சை, 28. சாக்கிய நாயனுர் : சிவபிரானது திருவடியை மறவா மனத்தினராய்க் கல் எறிந்து பூசித்த நல்லவர் இவர். இவர் செய்த குற்றத்தையும் இறைவர் குணமாகக் கொண்டனர். |Ir - * 29. சிறப்புலி : சிவனடியார்களுக்கு ஈதலிற் புகழ் பெற்ற வள்ளல் இவர். - * -" 80. சிறுத்தொண்டர் : இவர் ஊர் (திருச்)செங் காட்டங்குடி
பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/215
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை