பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. உபதேசம் 21 மனமே! நீ நைந்து கவலைப்பட்ாதே! இம்மையிற் போற்றித் துதித்தால் , அம்மையில் நமக்கு அருளுவார் எதிர்கொள்பாடிப் பெருமான். வேந்தராய் உலகாண்டு அறம் புரிந்து வீற்றிருந்த உடலும் துயர்க்கு ஆளாகும், ஆதலால், நெஞ்சே! திருத்தினைநகர்ச் சிவக்கொழுந்தினை அடைந்து போற்றுவாயாக. " * (3) புலவர்களுக்கு (23(i)) புலவீர்காள்! உங்கள் செயலை என்னென்று சொல்வது! ஒர் எள் கீழே விழுந்தாலும் அதை விடாது தேடி எடுப் பவரை, ஒரு ஈக்குக்கூட ஒன்றும் ஈயாதவரை நீங்கள் வள்ளலே என்று வாழ்த்திலுைம், கல்வி அறிவு இல்லாத வனைக் கற்ற பெரியோன் நீ, காமதேவனுக்கு நிகரானவன் நீ என்று புகழ்ந்தாலும், முடியத் தெரியாதவனே முற்றும் தெரிந்தவன் நீ என்று துதித்தாலும், கிலம் பெரிது உடையவன் ,ே சுற்றத்தாரை விரும்பி விருந்து ஒம்புகின் றவன் நீ என்று அப் பெருமைக்கு உரியன் அல்லாதவனே நீங்கள் புகழ்ந்தாலும், பெண்களுக்குக் காமதேவன் ,ே மிக்க அழகுக்கு இருப்பிடம் ,ே வேற்படைக் கையன் நீ என்று நீங்கள் போற்றிலுைம், நரைகள் போந்து, உடல் தளர்ந்து, மூத்து, நடுங்கிகிற்கும் கிழவனே மலைபோலத் திரண்ட தோளன் நீ என்று வாழ்த்திலுைம், நலம் இல்லாதவனே நல்லன் நீ என்றும், கிழவனே இளைஞன் நீ என்றும், குலம் இலாகவனக் குலவன் நீ என்றும், நோயாளி யைத் தடந்தோளன் நீ என்றும், அற்பனைப் பெரியோன் நீ, புலவோர்க்குத் தாய் நீ என்றும் நீங்கள் புகழ்ந்து கூறினலும், மிடுக்கு என்பதே இல்லாதவனைப் பீமன் நீ என்றும், யாதவனே நீ பாரி வள்ளல் என்றும், வஞ்சக நெஞ்சப் பஞ்சபாதகனும் துஷ்டனைச் சாது நீ என்றும் நீங்கள் வாழ்த்திலுைம், அத்தகைய வாசகங்களுக்கு மகிழ்ந்து உங்களுக்கு ஏதும் கொடுப்பார் இல்லை. ஆதலால், புலவிர்காள் அந்தப் பொய்ம்மையாளர்களைப் பாடாதீர்கள். புகலுரைப் பாடுமின்கள்; ஆங்களுக்கு இம்ன்மதில் உடையும் மாறும், மறுமையிற் சிவலேரக ஆட்சியும் அமருலக