இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தைப்பாவாய்
35
நோவு திர நூறு முத்தம்...! | |
---|---|
(கிராமியப் பாடல்) | |
அவன்: | பொளவு கொண்டா மாரி யம்மா |
பொளவு கொண்டா மாரி! | |
விளுந்து விளுந்து உளைச்ச தில்லே | |
மேலு காலு நோவுது! | |
அவள்: | வச்ச கஞ்சி ஆறி அங்கே |
வாளைத் தண்டாக் குளிருது! | |
இச்சைப் பேச்சுப் பேசிக் கிடக்க | |
இந்த நேரம் ஆவுமா ? | |
அவன்: | கஞ்சிக் கிஞ்சிப் பேச்சை இப்போக் |
காது கேக்க மறுக்குது! | |
கொஞ்சிப் பேசி ரெண்டு பேரும் | |
ருசியா இருக்கத் தோணுது! | |
அவள்: | கையை காலே ஆட்டிக் கிட்டு |
கண்ணை ரவையா சொளட்டுறே! | |
பையப் பையக் கிட்டே வந்து | |
பாயைத் தட்டிப் போடுறே! |