பக்கம்:தைப்பாவாய்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வ.கோ.சண்முகம் VARTE செவ்வாயின் ஆக்கிர மிப்பால் திணறுகின்ற ரோகிணி போல; ஒவ்வாத நம்பிக் கையால் ஒடுங்குமோர் நட்பே போல; எவ்வாறும் நிறைவே றாத இச்சைகள் போல; முகில்கள் கவ்வியதோர் நிலாப்போ லிருந்தாள்! கவின்மிகு அன்னம் போன்றாள்! வெறிகொண்டு மேலே பாயும் வேட்டைநாய்க் கூட்டத் துள்ளே உறவினைப் பிரிந்து வந்த ஒற்றைப் பெண் மானைப்போல் நிறைந்தசூழ் அரக்கி யருக்குள் நிலைகுலைந்தே அயர்ந்தி ருந்தாள் குறைவிலாப் பொறையின் மிக்காள் கோதிலாச் சீதை மாதா! (அசோக வனத்துள் அருஞ்சிறைப் பட்டு / சோகப் பதுமையாய் துயர்கள் கண்ட / மாதா சீதையை ஒலிய மாக்க / ஆதிகவியாம் வால்மீகி காட்டும் / அற்புதமான உவமைகள் இவைகள்!) (1960)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/15&oldid=1499243" இலிருந்து மீள்விக்கப்பட்டது