பக்கம்:தைப்பாவாய்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைப்பாவாய் கன்னி உதயங்காணாத் தாமரை நான்! ஒளியை உமிழா வைரமும் நான்! இதயம் என்னும் கலசமுண்டு; - அதில் இன்பமதுவோ துளியுமில்லை! ஏற்றிவையா தீபம் நான்! எழுதி முடியாக் காவியம் நான்! காற்றின் செல்வத் தென்றலுண்டு - அது கமழ்ந்து தவழ்ந்திடச் சோலை இல்லை! மலையைத் தழுவாக் கருமுகில் நான்! இலைகள் விரித்த பந்தியுண்டு; - அதில் மாலை யாகா அரும்புகள் நான்! இன்னமு தின்னும் படைக்கவில்லை! 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/38&oldid=1499290" இலிருந்து மீள்விக்கப்பட்டது