பக்கம்:தைப்பாவாய்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வ.கோ. சண்முகம் ஆடிப்பறக்கா இளமயில் நான்! அணைத்து மீட்டா வீணையும் நான்! கோடித் திரவியப் பேழையுண்டு; - அதைக் கொண்டு போகவொரு 'ஏழை' இல்லை! முழுதும் வளராக் குளிர்பிறை நான்! முற்றி அறுக்கா விளைச்சலும் நான்! தொழுது வணங்கிடக் கைகளுண்டு; - அவற்றின் 'துதி'யினை ஏற்கவொரு 'தெய்வ' மில்லை! (1955)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/39&oldid=1499292" இலிருந்து மீள்விக்கப்பட்டது