பக்கம்:தைப்பாவாய்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வ.கோ. சண்முகம் 'அத்தானே' என்றழைத்து ஆவலுடன் ஓடிவரும் 'பித்தான' நெஞ்சதுவும் போச்சோ' காதல் வித்ததுவும் கருகிமக்க லாச்சோ ? கோலமிடும் பொழுதினிலும் குனிந்த தலை நிமிர்வதில்லை! ஓலமிடும் விஷ உலகின் சதியோ?- அன்றிக் காலமிடும் நாணமதின் விதியோ ? பிள்ளைச்சிறு பிராயத்திலே பிஞ்சுமனப் பாசமெழத் துள்ளிவந்ததே எனையணைத்துக் களித்தாள்! - அக் கள்ளியதை இன்றெங்கே ஒளித்தாள்? சொன்னவைகள் மறந்தாளோ? சொப்பனமாய்த் துறந்தாளோ ? என்னவிதம் நானறிவேன் சிந்தை ? - அவள் புன்னகையும் புரிவதில்லை; விந்தை! (1959)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/41&oldid=1499295" இலிருந்து மீள்விக்கப்பட்டது