இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48 வ.கோ.சண்முகம் 'சனாதன சிசுருஷை' செய்து; தெம்பூட்ட முயலும் எனது சந்தர்ப்ப தோஷ வைதீக உத்திகள் கூட உன்வருகையால் ஒடுங்கி ஓடி விடுகின்றனவே! இது ஆச்சரியம் அல்லவா! வசந்தங்களின் வர்ணங்களில் உனக்கு உற்வசம் நடக்கிறது: அந்த உற்சவத்தில் மனப்பூச்சோடு ஊர்ந்து வந்து, உவந்து வந்தே என் இதயத்தின் அகல நீளத்தில் எத்தனை எத்தனை சௌந்தர்யத் தொட்டில் கட்டி ஆட்டுகிறாய்! பொதிகைப் பூங்காற்றாக என்ஆயாச வியர்வைத் துளிகளைத் துடைக்கும் விநாடித் துளிகளில் எல்லாம். நான் நிஜமாகவே வாழ்கிறேனே, அது என்னடி அதிசயம்!