பக்கம்:தொடாத வாலிபம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா o வத் தொடையில் படுத்து : யுேம் நானும் கொஞ்ச நேரம் காமக் கதைகள் பேசி, பிறகு, பார்வைக்குப் பார்வையும் உதடுக்கு உதடும், உடலுக்கு உடலும் தந்து, ஆனந்த காரியம் செய்து கொண்டிருந்தோமே, அந்த சுக சமயத்தைக் கண்டு, ஜாடையாக இராமல், உனது, சிவப்புக் கரங்களிலே சரிந்து, சத்தமிட்டு, சச்சரவு செய்து கொண்டிருந்த - வாயில்லாமலே வார்த்தையாடும்-அ ங் த வளையல்களை, நான் வெகு கோபத்தோடு ஒடிக்கையில்; உடனே உன் கை நகத்தால், என் பொன் உடலில் புண்கோடு இழுத் தாயே, இந்தப் புண், இன்னும் ஆறவே இல்லை ! உனது வலது கைங்கம் வாயில்ை சுட்ட வடு அல்லவா? ஆறுமா அது அவ்வளவு சுலபத்தில்! ஒருவர் கேட்டார்-இது என்ன புண் என்று. கிளி கீறிவிட்டது-என்றேன். 'உங்கள் ஊர் மூங்கில் முள்ளால், வந்த விபத்து தான் இது'-இன்னொருவர் கேள்விக்கு. இப்படி ஒரு பதில் சொன்னேன். பதிலா இது ? பொய் ! நமது சரீரச் சண்டையை அவர்களுக்கு அறி வித்தால், அது, நமக்குக் கூச்சமாயிற்றே. அதற்காகத் தான் இந்தப் பொய் ! - இளவரசி கற்கண்டைப் பாலிலே தள்ளிக் காய்ச்சிய பானம் இது ' "இதைக் கொண்டுபோய் தடாகத்திலே தள்ளு 33 جسمجسمہ ۔ ممہ ،س، مبس....ہـہ ہے۔ "عميم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/36&oldid=930831" இலிருந்து மீள்விக்கப்பட்டது