பக்கம்:தொடுவானம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 போதுமடா!

   தோடி             சாபு
           எடுப்பு

எல்லாம் சிவன் செயல் என்றே கவலையின்றி இருந்தது போதுமடா -

          மேல் எடுப்பு

பல்வேறு சாதிகள் பணக்காரர் ஏழைகள் தொல்லையை நீக்கலே நல்லற வழியாகும்!

          அமைதி  

கல்லடி தந்தாலும் சொல்லடி தந்தாலும் காவல் சிறையில் தள்ளிச் சாவ அடித்தாலும் இல்லார் இருப்பவர் இல்லாத தமிழ் நாட்டை அல்லவோ பெறவேண்டும் கொல்லறே!எழுந்திரு! பஞ்சணை தந்தாலும் நஞ்சைக் கொடுத்தாலும் கெஞ்சி உன் காலடி தஞ்சம் புகுந்தாலும் அஞ்சாதே கலங்காதே பஞ்சையைத் திரும்பிப் பார்! நெஞ்சை உருக்கும் ஏழை நிலை மாற்ற எழுந்திரு!

          51
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/53&oldid=1325412" இலிருந்து மீள்விக்கப்பட்டது