பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii மட்டுமல்ல. அன்பைப்பற்றிய பதிவுகள் தாம் மானுடத்தை மாற்றியமைக்கும் சரித்திரச் சிதறல்கள். 114ஆம் பக்கத்தில் ஒரு தகவல் வருகிறது; ஆம்; சீடன் மட்டும் குருவைத் தேடி அலைவது இல்லை; நல்ல குரு கூட தனக்கான சீடனுக்காகக் காத்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன் 'உலகத்தின் சிறந்த நூறு புத்தகங்கள் என்ற ஆங்கில நூல் ஒன்றை புத்தகக் கடையில் கண்டேன். வாங்கி அவசர அவசரமாகப் புரட்டினேன். 'திருக்குறள் பெயர் இருக்கிறதா என்று; ஏமாற்றம். இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளி யிட்டால் அந்நூலின் திருத்திய பதிப்பில் நிச்சயம் திருக்குறள் இருக்கும். - வெ. இறையன்பு