பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 101 எனவே, அகம் பிரம்மாஸ்மியாக இருக்கிறபோது பிரம்மம் பிரம்மாஸ்மியாக உள்ளது. அத்வைதியாக 'எல்லாம் நானாக இருக்கிறேன் என்று நினைக்கி றானே, அந்த நான் பெரிசாக வளர்ந்துவிட்டது. இந்த நானைப் போக்குவது நம்மாலே யெல்லாம் முடியவே முடியாது. கேள்இது: நீயும் காணக் கிளர்ந்த கோள் அரியின் கேழ்இல் தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்துப் பின் என் வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் (கம்ப.யுத்த.இரணிய வதை:146) 'ஊடலில்கூடப் பொம்பளையை நான் வணங்கினது இல்லடா. நீ சொன்ன நாராயணனையா வணங்குவேன் போடா. நீயுமாச்சு நாராயணனுமாச்சு என்றான். அது தான் பேராணவம். தான் பெற்ற பிள்ளை - ஒரே பிள்ளை. மலையி லிருந்து 'உருட்டுடா நான் சொன்னதைக் கேட்கலன்னா' கொல்லுடா. - புத்திர வாத்ஸல்யம் என்று சொல்வார் வடமொழிக் காரர். தள்ளமுடியாத அன்பு - புத்திர வாத்ஸல்யம். அதிலே தானே உயிரை விட்டான் தசரதன். அந்தப் புத்திர வாத்ஸல்யத்தையும் வென்றுவிட்டானே இவன். நினைத்துப் பாருங்கள் அப்படியானால், தன் ஆணவத் திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான்.
பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை