பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

அதாவது 'தொல் பத்து' என அழைக்கப்பட்டது. அதேபோல அடுத்த கட்டத்தில் அதாவது பத்துக் கொண்ட அடுக்கு வரிசையில், முன்னர் எண்பதை யடுத்திருந்த நூறு பின்னர்ப் பழைய நூறு அதாவது “தொல் நூறு” என வழங்கப்பட்டது. அதேபோல அடுத்த கட்டத்திலும் அதாவது நூறு கொண்ட அடுக்கு வரிசையிலும், முன்னர் எண்ணூறை அடுத்திருந்த ஆயிரம் பின்னர்ப் பழைய ஆயிரம் அதாவது 'தொல் ஆயிரம்' என அழைக்கப்பட்டது. இவற்றுள் தொல் பத்து என்பது தொன்பது - ஒன்பது எனவும், தொல் நூறு என்பது தொன்னூறு - தொண்ணுாறு எனவும், தொல் ஆயிரம் என்பது தொல்லாயிரம் - தொள்ளாயிரம் - தொளாயிரம் எனவும் நாளடைவில் மாறின. ஒன்பது, தொண்ணுாறு, தொள்ளாயிரம் என்பவற்றின் பெயர்க்காரணம் இதுதான்!”

இவ்வாறு புதிய ஆராய்ச்சியாளர் சிலர் புகலுகின்றனர். இவர்தம் கூற்று பொருந்தாது என எளிதில் மறுத்துவிடலாம். அதற்கு இரண்டு சான்றுகள் உள்ளன; வருமாறு:- -

(1) தொல் பத்து என்பது தொன்பது என்று வேண்டுமானல் மாறமுடியுமே தவிர, ஒன்பது என்று மாறமுடியாது. தொல் (தொன்மை) நூறு தொன்னூறு எனவும், தொல் (தொன்மை) ஆயிரம் தொல்லாயிரம் எனவும் மாற முடியுமே தவிர, தொண்ணுாறு என்றும் தொள்ளாயிரம் என்றும் மாற முடியாது.