பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எண்ணமேயில்லாத இளமைப்பருவம் உடையவராகவும் இருக்கின்றனர். இதனைக் கைக்கிளைக் காமம் என்பர். ஆண், பெண் என்னும் இருவரில், ஆண் மூப்புடையவ னாகவோ பெண் மூப்புடையவளாகவோ அல்லது இருவரும் மூப்புடையவராகவோ இருந்து நுகரும் காமமும், அளவு கடந்த காமத்தையுடையவராகவிருந்து மற்றவரிடத்தில் மிகமிக முறைகேடாக நடந்து நுகரும் காமமும் உண்டு. இவற்றைப் பெருந்திணைக் காமம் என்பர். மேற்கூறிய இரண்டு காமங்கட்கும் வேறாய் காமம் நுகர்தற்குரிய பருவமுடைய தலைவன், தலைவியரிருவர் ஒருவர்மேல் ஒருவர் அன்புடையவராகக் கூடி, நுகரும் காமமும் உண்டு. இவ்விருவர் கூட்டத்தை இருவயின் ஒத்த காமக்கூட்டம் என்று கூறுவர். மேலே காட்டிய மூன்று வகையான காமத்தில், சிறுமை பற்றிய கைக்கிளைக் காமமும், ஒவ்வாத முறையினை யுடைய பெருந்திணைக் காமமும் உலகத்தில் மிகுதியும் நடப்பனவாகும். ஆனால், அவை பழிப்புடையன. ஐந்திணைக் காமம் எங்கேயோ ஒன்று நடக்கலாம். ஆனால் அது சிறந்தது, புகழுடையது. காதற் காமம் காமத்துச் சிறந்தது (9 - 14 அடி) என்று பரிபாடல் கூறுவதைக் காண்க. கைக்கிளைக் காமமும், பெருந்திணைக் காமமும் உலகில் பெரும்பாலும் நிகழ்பொருளாதலின், தொல்காப்பியர் அவற்றைச் சொல்ல வேண்டும் என்ற முறைக்காகத் தம் நூலுள் குறிப்பிடுகின்றனர். ஆனால், சிறந்த காமமாகிய ஐந்திணைக் காமத்தை மட்டும் அவர் நல்ல முறையில் கூறிச் செல்கின்றார். உலக நடைமுறையைப் பார்க்கின்றோம். எங்கும் தன்னலக் கொள்கைகளே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அறிவில்லாதவனை அறிவுடையவன் ஏமாற்றுகின்றான். எளியவனை வலியவன் நசுக்குகின்றான். செல்வனுடைய