பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 இலகுதம் தொழிலில் இயங்கிநின் றனராய் உழைத்துப் பயன்தோற்றும் ஒளிபெறு வாகையும் இரப்போர் வகையும் புரப்போர் வகையும் புகழ்வோர் வகையும் பழிப்போர் வகையும் வாழ்த்தின் வகையும் அங்கத வகையும் பரவும் வகையொடு பாங்குறப் பெற்று பலவாய் வருமெனப் பகர்ந்தனர் புலவர் எனவே சொல்லால், பொருளால், சுவைதரு யாப்பால், பல்வகை யாகப் பகர்ந்திடும் வகையால், எல்லா நடையும் எழில்பெற நடக்கும்.