பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா சஅ கல்கி

காமத்திணை என்பதனைக் குறிப்பென்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. அச்சமும் இயல்பன்றோவெனின், அதுவும் வேட்கைக்குறிப் பினான் நீங்குமென்ப, அச்சமுள்வழி வேட்கை நிகழாமையின், வேட். கையுள்வழி நானும் மடனும் நீங்காவோ எனின், அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. இதனாற் சொல்லியது தலைவி தலைவனை எதிர்ப்பட்டு முன்னிலையாக்கல் முதலாகத் தலைவன்மாட்டு நிகழ்ந்தமைபோலத் தலைவிமாட்டு நிகழ்பவை உளவோ வெனின், அவள். மாட்டுக் குறிப்பினானாதல், சொல்லுதற்குத் தக்க விடத்தினானாதல் தோற்றுவதல்லது, புலப்பட்டு நிகழா தென்றவா றாயிற்று.

உண்டார்கண் அல்ல தடுதறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்தல் இன்று' (குறள் 1090)

என்றது தலைவனைக் கண்ட தலைவி வேட்கைக் குறிப்பினால் தன். லுள்ளே கருதியது.

இடம் பற்றி வேட்கை தோற்றியதற்குச் செய்யுள்:

È # X

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S tt L S 0 S S S t SLSS 0 S S AAAA S 0 S S 0 CCAAA S S S S 0 S

நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணா மோவெனக் காலிற் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால் ஒழிகோ யானென அழிதகக் கூறி யான் பெயர்க என்ன நோக்கித் தான்தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும்என் கட்கே' (அகம். 110)

எனத் தன் குறிப்புக் காலத்தாற் கூறுதலாற்றாது பின் இடம்பெற். றுழிக் கூறியவாறு காண்க. (க.க)

جي ، .....: انجام میبینیمم نسبت به همین ع3:یعه

1. இவ்வுரையாசிரியர் அகநானூறு 110 ஆம் பாடலைத் தலைவி கற்றாகக் கொண்டார் எனத்தெரிகிறது. இதன் ஈற்றடி இங்கு எடுத்துக்காட்டியபடி நின். றோன் போலும் இன்றுமென் கட்கே' என்ற பா ...மே இவ்விடத்திற்கு ஏற்புடைய தாகும்.