பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உத శ్రీ థ్ర

அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும் ஏமஞ் சான்ற வுவகைக் கண்ணும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் அன்னவு முளவே ஓரிடத் தான.

இளம்பூரணம்

என்றது, தலைவிக்கு இயற்கைப்புணர்ச்சி முதலாகக் களவின்கட் குறிப்பினு மிடத்தினு மல்லது (களவியல் - 18; நிகழ்ச்சி யெல்லாவற்றினும் கூற்று நிகழுமிடம் உணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்) மறைந்தவற் காண்டல் என்பது-தன்னைத் தலைவன் காணாமல் தான் அவனைக் காணுங் காட்சி.

தற்காட்டுறுதல் என்பது - தன்னை அவன் காணுமாறு நிற்றல். . .

நிறைந்த ... மழுங்கல் என்பது - நிரம்பிய வேட்கையால் தலைவன் கூறிய சொற் கேட்டு எதிர்மொழி கூறாது மடிந்து நிற்றல்,

இம் மூன்றிடத்தினுங் கூற்று நிகழாது. வழிபாடு மறுத்தல் என்பது-அதன்பின் இவள் வேட்கைக் குறிப்புக் கண்டு சாரலுற்றவழி அதற்கு உடம்படாது மறுத்தல்.

அது குறிப்பினானும் கூற்றினானும் வரும். மறுத்தெதிர்கோடல் என்பது மறுத்தாங்கு மறாது பின்னும் ஏற்றுக்கோடல். -

பழிதீர்..தோற்றல்-குற்றந்தீர்ந்த முறுவல் சிறிது தோற்றுவித்தல், -

அது புணர்தற்குஉடன்பாடுகாட்டி நிற்கும். இவை ஆறுநிலையும் புணர்ச்சிக்கு முன் நிகழும். ஈண்டுங் குறிப்பு நிகழ்ச்சியல்லது கூற்று நிகழ்ச்சி அருகியல்லது வாராது. அவற்றுள் சில வருமாறு: ‘இகல்வேந்தன் சேனை’ என்னும் முல்லைக்கலியுள்,

மாமருண் டன்ன மழைக்கண்சிற் றாய்த்தியர் நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை யாமுனியா ஏறுபோல் வைகற் பதின் மரைக் காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை