பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அகப்பொருள் ஒருவரையும் சாராது பொதுப்பட வரும் என்பது பெறப்படுகின்றது. ஆதலால் தான், அகப்பொருள் பாடல்களில் கட்டிப் பெயர் கூறும் பாத்திரங் களை நாம் சந்திப்பதே இல்லை; தூய காதல் நிலவும் எல்லைக்குள் பெயர் சுட்டும் வழக்கமே இல்லை. இது தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்த இலக்கணம். அகத்தினை மாங் தர்களைப் பற்றி இவ்வாசிரியரின் *அகத்திணைக்கொள்கைகள்' என்ற நூலில் விரிவாகவும் விளக்க மாகவும் ஆராயப்பெற்றுள்ளன. ஆண்டுக் கண்டு தெளிக.48 --سسسسسسسسسس-----------------------------سسسسسسسس - مسمسمسم نس----------------سسسسسس 15. அகத்திணைக் கொள்கைகள் . பிரிவுW அல் இயல்கள் 23, 24, 25 காண்க. (நூல் கிடைக்குமிடம் : பாரி கிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை-600 108), *